பயண வேதவசனங்கள் – Tamil Bible Words for Travel

Tamil Bible Words for Travel

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் நம்மை காக்கிற ஆண்டவர் நம்முடைய பயணங்களில் நமக்கு பாதுகாப்பாக, வழிகாட்டியாக இருக்க வேண்டுவோம். அவர் ஒரு போதும் நம்மை கைவிடுவது இல்லை. ஒரு தீங்குக்கும் நம்மை ஒப்பு கொடுப்பதும் இல்லை. நம்முடைய அன்றாட பயணங்களில் நாம் பயன்படுத்த வேண்டிய வேத வசனங்களை இங்கே பார்க்கலாம்.

திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். யோசுவா 1:9

கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார். சங்கீதம் 121:8

என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன். யாத்திராகமம் 33:14

உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. சங்கீதம் 91:7

நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். உபாகமம் 28:6

உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். சங்கீதம் 91:11

நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை. ஏசாயா 43:2

உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். நீதிமொழிகள் 3:6

உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார். செப்பனியா 3:17

பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. சங்கீதம் 121:6

இந்த வேத வசனங்கள் உங்கள் வாழ்க்கை பயணத்தை கர்த்தரின் வார்த்தைகளோடு அன்றாட பயணத்திற்கு உதவியதாக நம்புகிறோம். உங்களுக்கு தேவையான வேத வசனத்தை எடிட்டிங் செய்ய தொடர்புக்கு

பிழைகள் இருந்தால் தெரியப்படுத்தவும்
Scroll to Top